திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனையடுத்து பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை பயன்படுத்தி கோவிலுக்கு வந்தனர். பின்னர் வெளிப்பிரகாரம், பொது, சிறப்பு கட்டண தரிசன வழிகளில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.