ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் வசித்து வருபவர்கள் பழங்குடியினத்தை சேர்ந்த நவீன் மற்றும் ஆஞ்சி.  இவர்கள் இருவரும் திருட்டு தொழில் செய்பவர்கள். இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்ஆஞ்சி நவீனுக்கு மது குடிக்க வாங்கி கொடுத்தார். நன்றாக குடித்துவிட்டு போதை ஏறிய நிலையில் இருந்த நவீனை ஓங்கோல் ரிங்ஸ் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் அழைத்துச் சென்று தனது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளார்.

பின்னர் நவீன் முகத்தில் அந்த கும்பலில் இருந்த மூன்று பேர் சிறுநீர் கழித்துள்ளனர். இதனை காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். அந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் அந்த கும்பலை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் போராட்டம் மேற்கொள்வோம் என பழங்குடியினர் சங்கம் தெரிவித்துள்ளது.