நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் தான் மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட சம்பவம். இந்த சம்பவம் நேற்று மாலை ட்விட்டர் பக்கத்தில் காணொளியாக வெளியாகிய இந்த சம்பவம்  நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய சட்டத்தின்படி இது போன்று வன்முறையை ஏற்படுத்தும் காணொளிகளை வெளியிடக் கூடாது என்றும் இதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த காணொளியை நீக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் ட்விட்டர்  நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.