அதிவேகமாக பைக் ஓட்டி செல்வதால் பல்வேறு பயங்கரமான விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் பயங்கர சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றதால், பைக் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரின் மேல் இருந்த மின்கம்பத்தில் பலமாக மோதியது.

இதனால், பைக்கில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதிவேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிகிறது. இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.