மத்திபிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மனித கரு இருப்பதாக குழந்தை உரிமைகள் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மத்தியபிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது பள்ளியில் உயிரியல் ஆய்வகத்தில் மனித கரு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஓம்கார் சிங் தாக்கூர் கூறியதாவது “மருத்துவ கல்லூரிகளில் இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட மனித கரு இருந்தாலும் அதனை வைத்திருப்பதற்கு அனுமதி தேவை. எனினும் பள்ளி நிர்வாகம் மனித கரு வைத்திருந்தது தொடர்பாக சரியான விளக்கம் அளிக்காததால் அவர்களிடம் புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.