அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சற்று முன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பூடான் எல்லையில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் கடந்த ஒரு வாரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.