நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மைசூருவில் நடைபெறும் “Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் மெகா நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட இருக்கிறார். அதோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற “Project Tiger”  நினைவு நாணயமும் வெளியிட உள்ளார். மேலும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக பல அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.