ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசு தின விழாவின் போது பள்ளிக்கூடம் ஒன்றில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மத்தியில் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ஆசிரியர் மறுத்துள்ளார்.

மேலும் “கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை” எனக் கூறியுள்ளார். இதனால் ஆசிரியை தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் “பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்கிறேன்” என பாஜகவை சேர்ந்த அம்மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார்.