முதலீடு செய்யக்கூடிய தொகை பாதுகாப்பாகவும் அதே சமயம் அதிகமான லாபத்தை தரக்கூடியதாக இருக்க விரும்புபவர்களுக்கு SIP திட்டம் என்பது சிறந்ததாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்து வந்தால் குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகு நீங்கள் எதிர்பாராத அளவு லாபத்தை பெறலாம்.

அதன்படி ஐந்தாயிரம் ரூபாய் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்தால் 15 ஆண்டுகளில் ஒன்பது லட்சம் ரூபாய் முதலீடு தொகையும் இதற்கு 12 சதவீதம் வட்டியாக 16,22,280 ரூபாய் சேர்த்து மொத்தம் 25,22,880 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். சுமார் 20 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை தொடர்ந்தால் மொத்தம் 49,95,740 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். அதேசமயம் 25 ஆண்டுகள் இந்த திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்தால் 94,88,175 கிடைக்கும். நீங்கள் உழைக்கும் காலத்தில் இந்த திட்டத்தை தொடங்கி ஓய்வு காலத்தில் சிறப்பான லாபத்தை பெறுவதற்கு மிக உதவியாக இருக்கும் என்பதால் உடனே இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள்.