ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதே தேதியில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது. அதாவது ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மறுநாளே வாக்கு எண்ணிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை பிறகு பள்ளிகளை திறக்கலாம் என பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.