திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை இடையே புதிய மெமு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது காலை 8.30 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு மாங்குடி, மாவூர், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வழியாக காலை 10.05 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடையும். அதனைப் போலவே மறுமார்க்கமாக மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 6.55 மணிக்கு திருவாரூர் வந்தடையும். திருவாரூர் மற்றும் தஞ்சை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.