வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. பொன்முடியை போல் பெரியசாமிக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி உடனே பறிபோகும். இதனால் இந்த தீர்ப்பு மீது அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது.