சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் சாந்தனின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது கோமாநிலைக்குச் சென்ற அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.