பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்கு விருதுநகர் சந்தை பிரதானம். பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளுக்கு இங்கு தான் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில் உளுந்து மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். அதாவது முழு உளுந்து 100 கிலோ மூட்டைக்கு 700 ரூபாய் வரையும், சாதா உளுந்து 200, தொலி உளுந்து 100 ரூபாய் மற்றும் பாசிப்பருப்பு 150 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.