உடல் நல குறைவால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், குடியாத்தத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெஞ்சுவலியால் அலறி துடித்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை விரைந்துள்ளார்.