தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற்று வந்த பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்றுடன் பரப்புரை நிறைவடைந்துள்ளது. இப்போது முதல் வாக்குப்பதிவு முடியும் வரை எந்த கட்சியும் சுயேச்சை வேட்பாளர்களும் பரப்புரை செய்வதற்கு அனுமதி கிடையாது.