தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் வடக்கு உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அசௌகரியத்தை உணருவார்கள் என்றும், எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.