ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் அருகே சுர்சுரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை திருடுவதற்காக வந்த போது பணத்தை எடுக்க முடியாததால் ஏடிஎம் இயந்திரத்தோடு தூக்கி சென்றுள்ளனர்.

அந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 8 லட்சம் பணம் இருந்துள்ளது. இதுகுறித்து வங்கி நிர்வாகம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கி சென்ற காட்சிகள் அங்கிருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதால் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.