அதானி குழுமத்தின் மதிப்பை குறைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரம் வச்சு அறிக்கையை கஹிண்டர் பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக அதானி குழுமபம் குற்றம் சாட்டியுள்ளது. எங்கள் வீழ்ச்சியிலிருந்து ஹிண்டன் பர்க் நிறுவனம் ஆதாயம் அடைய முயற்சி செய்கிறது. அந்நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று அதானி குழுமத்தின் தலைமை சட்ட ஆலோசகர் ஜதின் ஜலுந்த்வாலா தெரிவித்துள்ளார். மேலும் அதானி குழுமம் பல வருடங்களாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஆனால் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டதால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு 97,000 கோடி சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் ஹிண்டன் பர்க் நிறுவனம் தற்போது அதானி குழுமபத்திற்கு சவால் விட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்த அதானி குழுமத்தின் எச்சரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் எங்களிடம் விரிவான அறிக்கை இருப்பதாகவும் அதற்கு எதிரான எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் தகுதியற்றதாகவே இருக்கும் என்றும் ஹிண்டன் பார்க் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதானி குழுமம் முடிந்தால் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்து பார்க்கட்டும் எனவும் ஹிண்டன் பர்க் நிறுவனம் சவால் விட்டுள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 88 கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.