காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனவர்த்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் கவரிங் நகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனவர்தினி தனது தோழி மேகலாவுடன் ஸ்கூட்டரில் ராணிப்பேட்டைக்கு சென்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் இருவரும் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் துறை பெரும்பாக்கத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனவர்த்தினி பரிதாபமாக இருந்துவிட்டார். மேகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.