கரூர் மாவட்டத்தில் உள்ள சோமூர் குடி தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலா கூட்டுறவு வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இதனையடுத்து கூலி வேலைக்கு சென்று வந்த கலா கடனை முறையாக செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த கலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கலாவை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.