நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை அருகே 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

நேற்று இரவு வீட்டிற்கு பின்புறம் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தில் சிறுமி தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.