திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின் இழுவை ரயில் படிப்பாதை, ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் மலைக்கோவிலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. இதனால் தற்காலிகமாக ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை வழியாக மலை கோவிலுக்கு சென்று வருகின்றனர்.