கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பிள்ளாறி அக்ரஹாரத்தில் சென்றாயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 25-ஆம் தேதி முனியம்மாள் தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முனியம்மாளின் மகன் கோவிந்தராஜ்(30) தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அதற்கு முனியம்மாள் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த கோவிந்தராஜ் தனது தாயை குழாயால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த முனியம்மாள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதேபோல் கோவிந்தராஜின் மனைவி பார்வதி தன்னை முனியம்மாள், ஜனனி ஆகிய இருவரும் தாக்கியதாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் முனியம்மாள் மற்றும் ஜனனி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.