நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று காலை செல்வகுமார் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு மதியம் ஹோட்டலில் உணவு வாங்கிக்கொண்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பழைய தபால் நிலையம் அருகே சென்றபோது எதிரே அதிவேகமாக ஒரு கார் வந்தது.

இதனை பார்த்ததும் செல்வகுமார் மொபட்டை சாலையோரம் நிறுத்த முயன்றார். அப்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த செல்வகுமார் கார் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.