கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தம்பட்டி பகுதியில் விவசாய காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதுடைய சபாவதி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று குழந்தை வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த குழந்தை மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.