கரூர் மாவட்டத்தில் உள்ள முனியநாதபுரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க மேற்கு ஒன்றிய கிளை செயலாளராக இருந்துள்ளார். இவர் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் மனோகரன் புகளூர் நான்கு ரோடு பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லோகநாதன் என்பவர் ஒட்டி வந்த டாக்டர் மனோகரனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மனோகரனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர் மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லோகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.