நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் முட்டை உற்பத்தி செலவிற்கு ஏற்ற குறைந்தபட்ச விலையை உற்பத்தி செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் ஒற்றை சாளர முறையில் விலை மாற்றம் செய்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் போன்ற பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோழி கோழி பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது ஒவ்வொரு மண்டலத்திலும் விற்பனை உற்பத்தி மற்றும் பருவ நிலைக்கு தகுந்தார் போல் வித்யாசத்தை ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும்.

அதேபோல் இரண்டு முதல் ஐந்து பைசா வரை மட்டும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் கோழி பண்ணையாளர்கள் மற்றும் நுகர்வோரை ஏமாற்றும் விதமாக எந்த அமைப்பும் மைனஸ் முறையை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யக் கூடாது எனவும் ஒவ்வொரு உற்பத்தி மண்டலங்களிலும் ஒற்றை சாளர முறையில் முட்டை மற்றும் உதிர்வு கோழி விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.