குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிஷ் சொலாங்கி என்பவர் அவரது மனைவி, அவரது பெற்றோர் மற்றும் மூன்று குழந்தைகள் என ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்ததாகவும் மற்ற ஆறு பேரும் விஷம் சாப்பிட்டதால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறும் காவல்துறையினர் பண பிரச்சனையினால் தான் குடும்பத்தோடு தற்கொலை செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.