டெல்லியில் உள்ள ஜெயித்பூர் பகுதியை சேர்ந்த பூஜா யாதவ் என்பவர் தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வீட்டிற்குள் வந்தபோது ஒரு நபர் அவரை தொடர்ந்து வீட்டிற்குள் வந்து நான்கு முறை பூஜாவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பூஜா பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தப்பிக்க முயன்ற நபரை பூஜாவின் தம்பி பிடிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தாய் மற்றும் தம்பி கண் எதிரே பெண் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.