உத்தபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பொது இடத்தில் அமர்ந்து கொண்டு தனது மகன் விற்பனைக்கு என போர்டை வைத்துள்ளார். கடன் வலையில் சிக்கிக்கொண்ட ராஜ்குமாருக்கு ஆறிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் வரை தேவைப்பட்டதால் தனது 11 வயது மகனை விற்பனை செய்ய முடிவு செய்து போர்டுடன் அமர்ந்துள்ளார்.

ஆனால் இந்த முடிவை அவர் மிகுந்த வருத்தத்துடன் தான் எடுத்துள்ளார் என்பது வைரலான காணொளியின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.