ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே 2 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணிகள் ரயில் மீது ராயகடா விரைவு ரயில் மோதி விபத்துக் கொள்ளானது. இந்த ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.