பஞ்சாப் சிந்து வங்கியில் பணிபுரியும் சோப்ரா என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் திடீரென மெட்ரோ ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது சடலம் கைப்பற்றப்பட்ட நிலையில் எந்த ஒரு தற்கொலை குறிப்பும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.