ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இரண்டு பேர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டனர். ஹெல்மெட் அணிந்திருந்த ஒருவரும் கேப் அணிந்திருந்த மற்றொருவரும் இணைந்து உணவகத்தின் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதோடு ஒரு குறிப்பு ஒன்றையும் உணவகத்தில் விட்டு சென்றனர்.

அதில் தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.