கேரளாவின் களமச்சேரி சேரி குண்டுவெடிப்பில் ஏற்கனவே ஒரு பெண் உயிர் இழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு இரண்டாக அதிகரித்து இருக்கிறது.

கேரள மாநிலம் கொச்சி களமச் சேரியில் யகோவாவின் சாட்சிகள் என்ற கிருத்துவ அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 2500 மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.இன்று காலை 9.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கி  பத்து நிமிடங்களான போது பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்தன. ஏற்கனவே இதன் மூலமாக ஒருவர் உயிரிழந்த அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் ஏற்கனவே ஒரு பெண் உயிரிழந்திருந்தார்.

36 பேர் இதில் காயமடைந்திருந்தார்கள். இது தொடர்பாக ஏற்கனவே ஒருவர் சரண் அடைந்திருக்கிறார். குண்டுகளை வெடிக்க செய்ததாக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரிடம் ஒருபுறம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்களில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கேரள குண்டு வெடிப்பில்  உயிரிழந்தவன் எண்ணிக்கை  2ஆக அதிகரித்துள்ளது.