சென்னையில் ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த 15 வயது சிறுவன் கீழே விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து திரு.வி.க நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது சிறுவன் பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்துள்ளான். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சக்கரம் எறியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் விசாரணனை நடத்தி வருகிறன்றனர். மேலும் பேருந்து ஓட்டுநர் தனசேகரனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் செங்கல்பட்டில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்து 4 மாணவர்கள் பலியான நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.