பெண்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் ரூ.1000த்தை பெண்களுக்கு பிச்சை போட்டால் அவர்கள் வாக்களித்து விடுவார்களா எனபாஜகவை சேர்ந்த குஷ்பு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நடிகை அம்பிகா, “யார் என்ன உதவி செய்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. மக்களுக்கு உதவி செய்தால் அதனை பாராட்ட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் நான் எந்த கட்சியையும் சார்ந்து இல்லாதபோது மற்றவர்கள் என்னை பற்றி பேசுவதற்கு எந்த பயனும் இல்லை. தேர்தல் நேரம் நெருங்கி வருவதால் அம்பிகாவுக்கு அரசியலில் நுழைய விருப்பம் இருப்பதாக வதந்தி பரவும் என்பது எனக்கு தெரியும். இதற்காக எல்லாம் என்னால் எதற்கும் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.