தேர்தல் பத்திர ஊழல்  குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவிட்ட எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், மோடி உருவாக்கிய புதிய இந்தியாவில் “லஞ்சம் மற்றும் சட்டவிரோத கமிஷன்கள் தேர்தல் பத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பல நிறுவனங்களை மிரட்டி ரூ.6,060.50 கோடி நிதி பெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.