தமிழில் 80’களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நித்யா ரவீந்திரன். இவர் மலையாள சினிமாவில் குருதி காலம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் தமிழ் சினிமாவில் குடும்பம் ஒரு கதம்பம், சாவித்திரி, உயர்ந்த உள்ளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சீரியல்களில் நடித்து வரும் நிலையில் ஒரு பேட்டியில் தான் கவர்ச்சியாக நடித்தது தொடர்பாக பேசியுள்ளார். கடந்த 1980-ஆம் ஆண்டு லாரி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆன போது அந்த படத்தில் நித்யா படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்தது எனக்கு தவறாக தெரியவில்லை என நித்தியா கூறியுள்ளார். அதன் பிறகு என்னுடைய தந்தை நான் படங்களில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டதால் நான் என்னுடைய படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு படங்களில் நடிக்க சென்று விட்டேன். அந்த காலங்களில் படங்களில் இப்படி தான் கதாபாத்திரம் இருக்கும் என்று இயக்குனர்கள் முன்கூட்டியே சொல்ல மாட்டார்கள் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை நித்யா ரவீந்திரனின் இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.