ஐபிஎல் 2024 போட்டிகள் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ரோகித் சர்மாவை பஞ்சாப் அணியின் கேப்டனாக களம் இறக்க ப்ரீத்தி ஜிந்தா திட்டமிட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் அதற்கு தற்போது ப்ரீத்தி ஜிந்தா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இணையதளங்களில் போலி செய்தியை பரப்புகிறார்கள். ரோகித் சர்மாவை பஞ்சாப் அணியின் கேப்டன் ஆக்க முயற்சி செய்கிறேன் என்ற செய்திகளுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

எனக்கு ரோகித் சர்மா மீது மிகுந்த மரியாதை உண்டு. நான் அவரின் தீவிர ரசிகை. நான் அவரை பஞ்சாப் அணியின் கேப்டன் ஆக்க  முயற்சி செய்கிறேன் என்பது குறித்து இதுவரை எந்த இடத்திலும் கூறியது கிடையாது. எனக்கு ஷிகர் தவான் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர் காயமடைந்திருக்கும் நிலையில் இப்படிப்பட்ட வதந்தி செய்திகளை பரப்புவது நல்லது கிடையாது. இணையதளத்தில் ஒரு செய்தி திரிக்கப்பட்டு எப்படி போலியான செய்தியாக வைரலாக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். மேலும் இத்தகைய போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என ஊடகங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.