இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. தெரு நாய் கடியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிப்படைகிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற பகுதியில் 4 வயது சிறுவனை 3 தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்துக் குதறியதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரதீப் என்ற அந்த சிறுவன் தன்னுடைய தந்தை காவலாளியாக வேலை பார்க்கும் இடத்திற்கு சென்ற போது தனியாக நடந்து சென்றுள்ளான்.

அப்போது 3 தெரு நாய்கள் சிறுவனை சூழ்ந்து கொண்டு துரத்தி துரத்தி கடிக்கிறது. சிறுவன் நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடும் போதும் விடாமல் நாய்கள் துரத்தி சிறுவனை கடித்துக் குதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெரு நாய்கள் தொல்லையை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.