தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள், மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயிலில் இன்று தரிசனம் செய்துள்ளார். நேற்று தான் தமிழகத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்திருந்த நிலையில், இன்று திடீரென ஷீரடிக்குச் சென்றது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு வந்த விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Thalapathy VIJAY seeks blessings at the Sai Baba temple in Shirdi 🙏🏼🙏🏼 pic.twitter.com/TIecAi51qW
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 29, 2026
தவெக கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள விஜய், முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக இவ்வாறு ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருவதாகப் பார்க்கப்படுகிறது. ஷீரடியில் சாய்பாபா முன்னிலையில் அவர் வழிபாடு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. விஜய்யின் இந்த அடுத்தடுத்த கோயில் பயணங்கள், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
