செய்தியாளர்களை சந்தித்த சீமான் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மத்திய நிதியமைச்சரை நீ கவர்மெண்ட் நடத்துறியா? இல்ல கந்துவட்டி நடத்துறியா? என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் என்னிடம் வரியை வாங்கி என்னிடமே கொடுப்பதற்கு, வரியை வாங்காமலே இருக்கலாமே என கூறியுள்ளார்.

உத்திரபிரதேசம், குஜராத் ஆகிய மாவட்டங்களில் பேரிடர் வந்தால் உடனே பதறிக்கொண்டு ரூ.500 கோடி நிவாரண நிதி அறிவிக்கும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். உங்களுக்கு இந்தி பேசுபவர்கள்தான் இந்தியன் மற்றவர்கள் இந்தியன் இல்லை என அவர் கூறியுள்ளார்.