பொங்கல் விடுமுறைக்கு இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜன. 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறைகள் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அக்கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றி ஜனவரி 8ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்.