சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னை மாநகராட்சியில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வருகிறது. நீலாங்கரை முதல் அக்கரை வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிதிவண்டி பாதை அமைக்கப்படும்.

சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் போன்ற அனைத்து போக்குவரத்து சேவைகளில் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய ஒருங்கிணைந்த OR பயணச்சீட்டு முறை மற்றும் பயண திட்டமிடலுக்கான செயலி 15 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.