இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு முதல் கட்டமாக முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வருகின்ற மே ஏழாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

எனவே ஏப்ரல் ஆறாம் தேதியான இன்று மாலை வரை விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டுமே இருப்பதால் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.