ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது மாணவி ரிச்சா சிங் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்ந்து வருகிறது.