திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளில் சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துகளை கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராஜாராமன் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இது சர்ச்சையான நிலையில், சனாதனம் குறித்த கருத்துகள் என மாற்றப்பட்டு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.