தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சமூக வலைதளமான எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களின் ஊழலை திசை திருப்பவே சனாதனத்துக்கு எதிராக உதயநிதி பேசி வருகிறார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிஜிஆர் மின்சார முறைகேடு, சத்துணவு முறைகேடு, டிரான்பார்மர் முறைகேடு, சென்னை மெட்ரோ ரயில் முறைகேடு, போக்குவரத்து ஊழல் என பல உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.