இஸ்ரேல் ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. முதல் நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது ஹமாஸ் தரப்பிலிருந்து 50 இஸ்ரேலியர்கள் 19 வெளிநாட்டினர் என மொத்தம் 69 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அதேபோன்று இஸ்ரேல் தரப்பிலிருந்து பாலஸ்தீனியர்கள் 150 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட ஐந்தாவது நாளில் 10 இஸ்ரேலியர்கள் இரண்டு வெளிநாட்டினர் என 12 பேரை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. இஸ்ரேலும் சிறையில் இருந்த பாலஸ்தீனியர்கள் 30 பேரை விடுதலை செய்துள்ளது.